கவுரவத்துக்காக / கௌரவதுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் கொலை!

கவுரவத்துக்காக / கௌரவதுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் கொலை!

பீஷமர் திருதராஷடிரனுக்கும் காந்தாரிக்கும் திருமணம் செய்துவைத்தார். அவர் திருமணம் செய்து வைத்தபின்புதான் தெரிந்தது காந்தாரி ஏற்கனவே கல்யாணம் செய்து விதவையானவர் என்று. இப்படி நம்மை ஏமாற்றி கல்யாணம் செய்ய காரணமாக இருந்த காந்தாரியின் அப்பா சுபாலன் மீது மிகவும் கோபமானார் பீஷ்மர். வெளியெ ஊருஉலகத்துக்கு தெரிந்தால் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டார். எனவே மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கவும் அவர்களது குடும்பத்தை கூண்டோடு கொல்லவும் திட்டமிட்டார். அதன்படி அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து மிகவும் கொஞ்சமான அளவே சாப்பாடு தரும்படி உத்தரவிட்டார். இதனால் சுபாலன் ஒரு யோசனை சொன்னார். நம்மில் யாராவது ஒரு புத்திசாலி மட்டும் அந்த உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தை செய்த பீஷ்மர் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக பழிவாங்க வேண்டும். என்று சொன்னார். அவர் சொன்ன யோசனைக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். வயதில் இளையவனும் சிறந்த மதிநுட்பமும் வாய்ந்த சகுதிதான் அதற்கு தகுதியானவன என்று அனைவரும் ஒருமனதாக தீர்மானித்தனர். இதனால் சகுனியின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சகுனின் கண்முன்பே பட்டினியாக இருந்ததனால் இறந்தனர். சகுனிக்கு தாயத்தின் மீது விருப்பம் உண்டு என்பது அவனது தந்தை சுபாலனுக்கு தெரியும். அதனால் சுபாலன் இறக்கும் முன்பே சகுனியிடம் கீழ்கண்டவாறு கூறினான்
நான் இறந்தபிறகு என் கை வில் எலும்புகளை எடுத்து நீ தாயக்கட்டை செய்து கொள். அந்த தாயக்கட்டை முழுவதும் என் கோபமும் ஆத்திரமும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாக்கட்டையை போட்டாலும் நீ விரும்பியபடியே எண்ணிக்கை விழும். எப்பொழுதும் உனக்கே வெற்றி கிடைக்கும் என்றார்!

இப்படி சகுனியின்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இறந்தபின் சகுனிமட்டுமே தப்பி பிழைத்தார். கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில, பாதுகாப்பில் வளர்ந்தார். அதனால் கௌரவர்களின் நண்பனாக காட்க்கொண்டார். மனதுக்குள் பீஷமரின் குடும்பத்தை கூண்டோடு அழித்திட சமயம் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.

நட்புக்கு துரோகம்

நம்பிக்கை துரோகம்