ஆஞ்சநேயர் வரலாறு!

ஆஞ்சநேயர் வரலாறு
அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் ஹனுமன். ஆஞ்சநேயரின் தாயார் முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு அப்சரஸ்ஸாக இருந்தார்.தவம் இயற்றி கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தர்க்காக சாபத்தை பெற்று குரங்காக மாறினார். ஆஞ்சநேயர் வரலாறு

ஒரு முறை  ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் அஞ்சனா.அதைப்பார்த்ததும் சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார்.உடனே அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது.கடும் கோபம் கொண்ட அந்த முனிவர், அஞ்சனா யார்மீதாவது காதல் கொண்டால்,அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார்.தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனா.தனக்கு குரங்கு முகம் இருந்தாலும் தன காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும்,சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும்வரம் வேண்டினாள்.மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும்,சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார;. முனிவரின் சாபத்தின் பலனால் ,பூமியில் பிறந்து,ஒரு காட்டில் வசித்து  வந்தாள். ஆஞ்சநேயர் வரலாறு
அப்பொழுது ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனை கண்டு அவன் அழகில் மயங்கி அவன் மேல் காதல் கொண்டாள்,காதல் கொண்ட அந்த தருணமே,அவள் குரங்காக மாறிவிட்டாள்.அவள் அருகில் வந்த அந்த ஆண்,தன்னை கேசரி என்றும் ,தான் குரங்குகளின் அரசன் என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும் உருமாற முடியும்,குரங்காகவும் உருமாற முடியும்.இதை கண்டு ஆச்சரியமடைந்தாள் அஞ்சனா.தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அஞ்சனாவிடம் அவன் கோரினான். அந்த காட்டிலேயே அஞ்சனாவும் கேசரியும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.திருமணதிற்கு பிறகும் சிவபெருமானை நினைத்து எபோழுதும் தவத்தில் இருந்தாள் அஞ்சனா.இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்னவரம் வேண்டும் என கேட்டார். ஆஞ்சநேயர் வரலாறு
முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள்.அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான். இதே சமயம் அங்கே,அயோத்தியாவின் அரசனான தசரத சக்கரவர்த்தியும் பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார், இதனால் மனம் குளிர்ந்த அக்னி தேவன், தசரதனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக தன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுக்குமாறு கூறினார்,தசரதனும் தன்னுடைய பட்டத்து ராணியான,கெளசல்யா ( கோசலை)விற்க்கும்  கைகேகிக்கும் இரண்டாக பிரித்து கொடுத்தார்.அவர்கள் இருவரும் ,தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து,இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள்.தசரதன் அந்த பிரசாதத்தை தன மனைவியருக்கு கொடுக்கும் போது.அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்து சென்று அஞ்சனா தவம் புரிந்த இடத்தருகே அந்த பாயசத்தை விட்டு சென்றது. ஆஞ்சநேயர் வரலாறு
 காற்றின் கடவுளான வாயுபகவானிடம் அந்த பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் போடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள்,அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை அஞ்சனா உணர்ந்தாள். அதன் பிறகு குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் அஞ்சனா,அக் குழந்தை சிவனின் அம்சமேயாகும் .அந்த குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது - ஆஞ்சநேயா (அஞ்சனாவின் மகன் என பொருள் தரும்), கேசரி நந்தனா (கேசரியின் மகன் என பொருள் தரும்), வாயுபுத்திரா அல்லது பவன் புத்திரா (காற்றின் கடவுளான வாயு தேவனின் மகன் என பொருள் தரும்)..அந்த குழந்தை  தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மிகுந்த பலசாலியாக விளங்கிவந்தார் ஹனுமன்.தன் தந்தை கேசரி மற்றும் தாய் அப்சரஸ் அஞ்சனாவின் சக்திகளை அவர் பெற்றார். வாயு தேவனின் மகன் என்பதால் காற்றை போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், அஞ்சனா தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற அஞ்சனா, வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராம பிரானின் தீவிர பக்தனானர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் வரலாறு