பிரமச்சாரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டு தெரியுமா உங்களுக்கு?

ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மகர்ட்வாஜா. அவன் ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான். வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது,
ஒரு முறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும் மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து அதற்க்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர் அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லபடுகிறது .

கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் உள்ள ராமாயணத்தில் சொல்லப்படுவது
இராமர் இலங்கைக்கு பாலம்  கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில்,அந்த சேது பந்தன பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது  கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான்.வானரபடைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணமல் போயின .இந்த மர்மத்தை கண்டு பிடிக்க ஹனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார்,அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரனம என தெரிந்து கொள்கிறார். இராவணனின் மகள்சுவன்னமச்சாவினை பார்க்கிறார் ஹனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூங்கி வேறு இடத்தில சேர்த்துக்கொண்டு இருந்தனர் அதை ஹனுமன் தடுக்கும் போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டி கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் ஹனுமனின் நல்ல உள்ளம் தெரிந்து கொண்டு ஹனுமன் மேல் காதல் கொண்டாள் ஹனுமனும் சுவன்னமச்சாஅழகில் மயங்கி  இருவரும் ஒன்றாக இணைந்தனர்அதில் பிறந்த மகன்தான் மச்சானு  என்று  சொல்லபடுகிறது.